Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகிறது, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது என்று திமுக பொருளாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட அரசு முன்வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் மக்கள் திமுகவை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர். விழாவில் பேசிய வி.சி.சந்திரகுமார், தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் இன்றைய தினம் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தே.மு. தி.க.வில் உள்ளவர்களை தி.மு.க.விற்கு அழைப்பது எனது உரிமை என்று குறிப்பிட்டார். தி.மு.க.வில் இணைந்த மக்கள் தே.மு.தி.க.வினரை மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

திமுகவின் மக்கள் பணி

திமுகவின் மக்கள் பணி

கடந்த 67 ஆண்டுகளாக திமுக மக்கள் பணியாற்றி வருகிறது. ஆட்சியில்இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தி.மு.க. தொடர்ந்து செய்யும். தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்பதால் அரசியலை விட்டு ஒதுங்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்த போது தமிழக வளர்ச்சிக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாதனை படைத்த தலைவர்

சாதனை படைத்த தலைவர்

சேலம் உருக்காலை, பெரியார் பல்கலையை அமைத்தது திமுக ஆட்சிதான். 13 முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்த தலைவர் கலைஞர். சாதனைத் தலைவர் தலைமையிலான திமுகவில் இணைந்துள்ள மதேதிமுகவினரை வரவேற்கிறேன்.

ரத்த ஆறு ஓடுகிறது

ரத்த ஆறு ஓடுகிறது

திமுக ஆட்சிக்கு வரவில்லையே என நம்மைவிட வேதனைப்படுபவர்கள் பொதுமக்கள்தான். தமிழகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. தினசரி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டன. ஒரு போன் செய்தால் போதும் கூலிப்படையினர் வந்து வெட்டி சாய்த்து விடுகின்றனர் என்றார் ஸ்டாலின்.

ஒரே எதிர்கட்சி

ஒரே எதிர்கட்சி

என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டசபையில் பேசாமால் வெளியே வரமாட்டோம். தற்போது தமிழக சட்டசபையில் ஒரே எதிர்க்கட்சியாக திமுக இடம் பெற்றுள்ளது.
நூற்றாண்டு கொண்ட திராவிட இயக்கம் மேலும் பல நூற்றாண்டு இருந்தாக வேண்டும். திமுக வை தொடங்கிய அண்ணா விட்டுச்சென்ற பணிகளை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். என்றும் ஸ்டாலின் கூறினார்.

மூடப்படாத மதுக்கடைகள்

மூடப்படாத மதுக்கடைகள்

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில், 500 கடைகளை முதல்கட்டமாக மூடியதாக சொல்லும் அதிமுக அரசு, கோவில்கள், மருத்துவமனைகள்,போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய மதுக்கடைகளை இன்னும் மூடவில்லை.

பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்


மதுவிலக்கு போராட்டத்தின் போது காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்ததற்கு காரணமான, கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதியில் உள்ள மதுக்கடை இன்னும் மூடப்படவில்லை. மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,
அங்கிருக்கும் மதுக்கடைகளை அகற்ற மாநில அரசு முன்வரவில்லை என்றார்.

 புதிய தொழிற்சாலைகள்

புதிய தொழிற்சாலைகள்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகியும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளாக 110 விதியின் கீழ் அறிவிப்புகள், ஆளுநர் உரையில் சொல்லப்பட்ட திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

 25ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அட்டை

25ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அட்டை

25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்து கொண்டதற்கான உறுப்பினர் படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார்,எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வழங்கினார்கள். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+