தயாராக இருக்கிறோம்.. உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்! கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா நடைபெறகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் தற்போது பரமக்குடி சென்றுள்ளார்.
அப்பா சிலை
இந்த நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில், என் அப்பாவிற்கு சிலை வைத்ததை அவர் விரும்பியது கிடையாது. அவர் இப்போது இருந்தாலும் தனக்கு சிலை வைக்க வேண்டாம் சொல்லி இருப்பார். ஆனால் நான் அவருக்கு வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பிரம்மாண்ட சிலை கிடையாது.
ஆனால் இல்லை
அந்த சிலை அவரை போலவே இருக்கும். அமெரிக்க சிற்பி ஒருவர் இதை செய்து தந்தார். அதேபோல் பரமக்குடியில் ஒரு திறன் தொகுப்பு மையம் அமைக்கிறோம். திறன் தொகுப்பு மையம் என் அப்பாவின் விருப்பம். அதனால் அவர் இருந்திருந்தால் இதற்கு பெருமைப்படுவார்.
தேர்தல் எப்படி
இந்த குடும்ப விழாவில் எனது குடும்பத்தினரும் கலந்து கொள்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்கிறோம்.
பணிகள்
நாங்கள் அதற்கான பணிகளை செய்து வருகிறோம். மருதநாயகம் படம் தயாராக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் நான் நடிப்பேனா என்பது சந்தேகம். பார்க்கலாம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.