எங்கள் கொள்கைகள் மாறாது.. ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம்.. கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருச்சி: தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் பேசி வருகிறார். இதில் உஷாவின் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

அவர் ''உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். எங்கள் கொள்கைகளை விரைவில் அறிவிப்போம். விரைவில் புத்தகம் வெளியிடுவோம். எல்லோரும் அப்போது படியுங்கள்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ''தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை. எதையும் ஆராயாமல் கருத்து சொல்வது என வேலையல்ல.'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ''வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யம் விலை போகாது.கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது.'' என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications