மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு தர்ம அடி!
ஈரோடு: மனைவியுடன் சண்டை போட்டு பிரிந்த முதியவர் சிறுமியுடன் தவறாக நடந்தபோது பொதுமக்களிடம் பிடிபட்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (58). இவரது மகன், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். மாணிக்கத்துடன் சண்டை போட்டு அவரது மனைவி தனியாக பிரிந்து சென்ற நிலையில், மாணிக்கம் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, அந்தியூர் சென்ற மாணிக்கம் வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சோர்ந்த, 12 வயது சிறுமி ஒருவர் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அவரும் தன்னுடைய வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.
அந்த சிறுமியை தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் வந்தவர், பிறகு புதர்கள் நிறைந்திருந்த மறைவான ஒரு இடத்திற்கு கொண்டுபோய் வைத்துக்கொண்டு, அச்சிறுமிக்கு "பாலியல்" தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு, அப்பகுதியல் உள்ளவர்கள் ஓடிச்சென்று மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, மாணிக்கத்தை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications