பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு - ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு - இளைஞர் பலி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உறவினர்களுக்குள் ஏற்பட்டத் தகராறால் ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ளது சாக்கன்கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது தாய்மாமன் முனிராஜ். இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது.

man died by his relative in Krishnagiri

இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பெரும் பிரச்சினையானது. இந்த வாய்த்தகராறு பிறகு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் முனிராஜ் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டத்தில் கனகராஜ் வயிற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+