”பிளைட் டாய்லெட்ல சீட் போடுங்க” – வித் அவுட்டில் விமானத்தில் போக வந்த சென்னை இளைஞர்
சென்னை: ரயிலில் வித்-அவுட்டில் போவது போலவே விமானத்திலும் டிக்கெட் எடுக்காமல் போக முயன்ற வாலிபரால் சென்னை விமான நிலையமே கலகலப்பில் ஆழ்ந்தது.
விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பை மீறி, சுவர் ஏறி குதித்து நுழைந்த வாலிபரை சுற்றுவளைத்து அதிகாரிகள் பிடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் விசாரணையில் ரயிலில் ஓசி பயணம் போன்று விமானத்திலும் பணம் இல்லாமல் செல்வதற்காக திருட்டுதனமாக விமானத்தில் ஏறவந்ததாக கூறியுள்ளார்.

5 அடுக்கு பாதுகாப்பு:
டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த "விமானக் கடத்தல்" தொடர்பான மிரட்டல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி மாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுவர் ஏறிக் குதித்து நுழைவு:
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 9 ஆவது நுழைவாயில் வழியாக ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார்.
தீவிர சோதனை:
அந்த வழியாக விமானத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். இதனால், அங்கு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளே செல்லும் பொருட்களையும், நபர்களையும் தீவிரமாக சோதனை நடத்தி அனுமதிப்பார்கள்.
உள்ளே நுழைந்த இளைஞர்:
ஆனால், பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி, அந்த வாலிபர் உள்ளே நுழைந்தார். அங்கு விமானங்கள் நிறுத்தும் இடத்தில் மறைந்து மறைந்து சென்று சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் நுழைய முயன்றார்.
சுற்றிவளைத்துப் பிடிப்பு:
இதை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
முன்னுக்குப் பின் பேச்சு:
அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது என தெரிந்தது.
கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை:
பின்னர் நேற்று மதியம் விமான நிலைய போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார், வாலிபரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, மனநிலை பாதித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ் இருந்ததை கைப்பற்றினர்.
13 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்:
சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளிடம் சிக்குபவர்கள் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கூறி, விடுவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 13 பேர், சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications