நெல்லை அருகே வியாபாரி வெட்டிக்கொலை: பதற்றம் - போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி அருகே வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ராமர். விவசாயி. இவர் வியாபாரமும் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மாலையில் அழகியபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டினர். இதில் ராமர் படுகாயத்துடன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து ராமரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Man hacked to Death in Tirunelveli

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான ராமரின் சகோதரி மகாலெட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மகாலெட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரித்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் சேகர் அவரது சகோதரர்கள் பெரியமாரி, சின்னமாரி ஆகியோர் சேர்ந்து ராமரை வெட்டி கொன்றது தெரிய வந்தது. இந்த கொலையால் அழகியபாண்டியபுரத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+