கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்.. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட் வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் நிகழ்த்திய வெறிச்செயலால் பதற்றம் உருவாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நபரை, 5 பேர் கும்பல் கொலை செய்துள்ளது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Man Killed by 5 Man Gang near Chengalpattu Court

இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாக பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விசாரணை நடந்து வருகிறது. வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+