ஆள் மாற்றி மற்றொருவரை கத்தியால் குத்திக் கொன்ற கொலையாளி- திருப்பூர் ஜவுளிக்கடையில் விபரீதம்!
திருப்பூர்: திருப்பூரில் ஜவுளிக்கடை ஒன்றில் ஆள் மாற்றி மற்றொருவரைக் குத்திக் கொன்ற கொலையாளியை போலீசார் தீவிரவாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியின் மகன் சந்தோஷ்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகபிரியன். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் கடை வைத்து, உள்ளூரில் உள்ள இரண்டாம் ரக பனியன் துணிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, இவருடைய கடைக்கு கன்னியாகுமரி சிலுவை நகரை சேர்ந்த மரியஜானின் மகன் பாபு (வயது-36) என்பவர் மொத்தமாக துணி ரோல்களை வாங்குவதற்காக வந்துள்ளார். கடையில் இருந்த பாபு துணி ரோல்களை எடுதுக் காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமி ஒருவன் கடைக்கு வந்துள்ளார். கடையில் சந்தோஷ்குமாரும், பாபுவும் இருந்துள்ளனர். அந்த நேரம் சண்முகப்பிரியன் கழிப்பிடத்துக்கு சென்று விட்டார். கடைக்குள் நுழைந்த ஆசாமி "சந்தோஷ் கடை இதுதானே" என்று கேட்டுள்ளார். சந்தோஷ்குமாரும் ஆமாம் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு சந்தோஷ்குமாரை குத்த பாய்ந்துள்ளார். சந்தோஷ்குமார் தடுத்தபோது அவருடைய 2 கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மர்ம ஆசாமியை தடுத்துள்ளார். அப்போது அந்த ஆசாமி பாபுவின் நெஞ்சுப்பகுதியில் குத்தினான். சத்தம் கேட்டு சண்முகப்பிரியன் கடைக்குள் ஓடி வந்துள்ளார். அதற்குள் அந்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.
நெஞ்சில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டதில் பாபு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், உதவி கமிஷனர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சந்தோஷ்குமாரையும், சண்முகப்பிரியனையும் கொலை செய்யும் நோக்கத்தில் அந்த ஆசாமி வந்ததும், அப்போது அங்கிருந்த பாபுவை, சண்முகப்பிரியன் என்று நினைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications