ஆள் மாற்றி மற்றொருவரை கத்தியால் குத்திக் கொன்ற கொலையாளி- திருப்பூர் ஜவுளிக்கடையில் விபரீதம்!
திருப்பூர்: திருப்பூரில் ஜவுளிக்கடை ஒன்றில் ஆள் மாற்றி மற்றொருவரைக் குத்திக் கொன்ற கொலையாளியை போலீசார் தீவிரவாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியின் மகன் சந்தோஷ்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகபிரியன். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் கடை வைத்து, உள்ளூரில் உள்ள இரண்டாம் ரக பனியன் துணிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, இவருடைய கடைக்கு கன்னியாகுமரி சிலுவை நகரை சேர்ந்த மரியஜானின் மகன் பாபு (வயது-36) என்பவர் மொத்தமாக துணி ரோல்களை வாங்குவதற்காக வந்துள்ளார். கடையில் இருந்த பாபு துணி ரோல்களை எடுதுக் காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமி ஒருவன் கடைக்கு வந்துள்ளார். கடையில் சந்தோஷ்குமாரும், பாபுவும் இருந்துள்ளனர். அந்த நேரம் சண்முகப்பிரியன் கழிப்பிடத்துக்கு சென்று விட்டார். கடைக்குள் நுழைந்த ஆசாமி "சந்தோஷ் கடை இதுதானே" என்று கேட்டுள்ளார். சந்தோஷ்குமாரும் ஆமாம் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு சந்தோஷ்குமாரை குத்த பாய்ந்துள்ளார். சந்தோஷ்குமார் தடுத்தபோது அவருடைய 2 கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மர்ம ஆசாமியை தடுத்துள்ளார். அப்போது அந்த ஆசாமி பாபுவின் நெஞ்சுப்பகுதியில் குத்தினான். சத்தம் கேட்டு சண்முகப்பிரியன் கடைக்குள் ஓடி வந்துள்ளார். அதற்குள் அந்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.
நெஞ்சில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டதில் பாபு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், உதவி கமிஷனர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சந்தோஷ்குமாரையும், சண்முகப்பிரியனையும் கொலை செய்யும் நோக்கத்தில் அந்த ஆசாமி வந்ததும், அப்போது அங்கிருந்த பாபுவை, சண்முகப்பிரியன் என்று நினைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications