நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் சரமாரி குத்திக்கொலை.. கொலை வெறியுடன் சக வழக்கறிஞர் போலீசில் சரண்
மானாமதுரை: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கறிஞர்களும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ராம்நாத் என்பவரை, கத்தியுடன் வந்த சக வழக்கறிஞர் முத்துராமலிங்கம் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதனைக் கண்ட வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கத்திக் குத்தில் காயம் அடைந்த ராம்நாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த கொலையை செய்த முத்துராமலிங்கம் போலீசில் சரண் அடைந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர், சக வழக்கறிஞர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.