லீ குவான் யூ மறைவுக்கு மன்னார்குடியில் போஸ்டர் போட்டு அஞ்சலி செலுத்திய மக்கள்!
மன்னார்குடி: சிங்கப்பூரின் முதல் மற்றும் நிறுவன பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் போஸ்டர் ஒட்டி அவரது மறைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரின் சிற்பி, தேசத் தந்தை, நவ சிங்கப்பூரை வடிவமைத்தவர் என்று பல பெருமைகளைக் கொண்டவர் லீ குவான் யூ. 91 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அவருக்கு சிங்கப்பூரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்ற கிராமத்தில் லி குவான் யூ படத்தை போஸ்டரில் போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.
தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் லீ குவான் யூவுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருப்பது அவரது வீச்சு எந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரந்துபட்டுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications