பஸ் நிறுத்தம் எதிரொலி.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுக்க பஸ் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைக்கப்படுகிறது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். பெ. கோவிந்தராசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications