99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன்... கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன்
99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன் என்று கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.
Recommended Video

சென்னை: 99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன் என்றும் 100 வது முறையாகவும் கேட்டு புன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார் என்றும் கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அற்புதம் நிகழ்ந்த இரவு என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.

கவிதை பின்வருமாறு:
அற்புதம் நிகழ்ந்த இரவு
.......
மனுஷ்ய புத்திரன்
......
எப்போதும் அற்புதங்களை நிகழ்த்திய தலைவன்
நேற்றிரவும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்
99 முறை தன் மரணச் செய்தியை
தானே கேட்டுச் சிரித்த தலைவன்
100 வது முறையாகவும் கேட்டு
புன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார்
கட்டுமரமாய் இருப்பேன் என்று சொன்ன தலைவனை
நேற்றிரவு ஆழிப்பேரலை ஒன்று சூழ்ந்தது
எங்கோ முழ்கி
ஒரு நீச்சல் சாகசக்காரனாய்
மிதந்து மேலே வருகிறார்
போராடுகிற மனிதனுக்கு
அதுவே ஒரு போதையாகிவிடுகிறது
அற்புதங்களை நிகழ்த்துகிற மனிதனுக்கு
அதுவே ஒரு பழக்கமாகிவிடுகிறது
அற்புதம் நிகழ்ந்த இரவில்
வதந்திகள் வெட்டுக்கிளிகளைபோல
நகரமெங்கும் பரவியிருந்தன
கடைகள் அவசரமாக அடைக்கப்பட்டன
மிஞ்சியிருந்த பால் பாக்கெட்டுகளை பதட்டத்துடன் வாங்கியடி
அவசரமாக வீடு நோக்கி நடந்தார்கள்
எல்லோரும் எல்லாவற்றையும் நம்பினார்கள்
எல்லோரும் எல்லாவற்றையும் சந்தேகித்தார்கள்
எல்லோரும் மற்றவர்களை தூங்கச் சொல்லிவிட்டு
எல்லோரும் விழித்திருந்தார்கள்
நகரமெங்கும் துயரம்
கம்பளம் விரித்து அமர்ந்திருந்தது
மக்கள் குரலை
எப்போதும் கேட்ட தலைவனுக்கு
இப்போதும் கேட்டது
மக்களின் குரல்
"எழுந்து வா தலைவா "
ஒரு நூற்றாண்டு களைப்பில்
சற்றே கண்ணயரச் சென்ற தலைவனின்
இதயத்தின் ஆழத்தில் கேட்டது அந்தக் குரல்
" எழுந்து வா தலைவா"
அந்தக்குரல்
மருத்துவமனையின்
மூடப்பட்ட கதவுகளை
அறுத்துச் சென்றது
பேரிருள் சூழந்த ஒரு இரவின்
கனத்த இருளை ஊடுருவிச் சென்றது
" எழுந்து வா தலைவா"
மக்கள் கொட்டும் மழையில்
கலைய மறுத்து நின்றுகொண்டிருக்கிறார்கள்
ஆயிரம் ஆயிரம் கண்ணீர் துளிகள் மேல் ஆயிரமாயிரம் மழைத்துளிகள்
விழுந்தவண்ணம் இருக்கின்றன
யாரோ ஒருத்தி மருத்துமனை வாயிற்கதவை
பிடித்து உலுக்குகிறாள்
" என் தகப்பனை வரச் சொல்
என் தலைவனை வரச் சொல்"
தலைவனின் காதில்
யாரோ சொல்கிறார்கள்
" நிலமை கட்டுக்கடங்காமல்
சென்று கொண்டிருக்கிறது
உங்களைத் தவிர வேறு யாரும்
அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது"
ஒரு நூற்றாண்டு காலம்
இலட்சோப இலட்சம் முடிவுகளை
எடுத்த தலைவன்
கண் விழித்து கண் துஞ்சும் வரை
முடிவுகள் எடுப்பதையே வாழ்வாக் கொண்ட தலைவன்
கரகரத்த குரலில் முணுமுணுக்கிறான்
" நான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்திருக்கிறேன்
அப்படித்தானே இதுவரை எல்லாமும் நடந்திருக்கிறது
அவர்களிடம் போய்ச் சொல்
நான் இன்னும் முடிவெடுக்கவில்லை
இன்றைய பொதுகூட்டம் முடிந்தது
பத்திரமாக வீட்டிற்குப் போகச் சொல்"
பிறகு நாங்கள்
வீடு திரும்பினோம்
என்று மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications