சசிகலா கட்டுப்பாட்டில் இருக்க முடியாது.. பாஜக பக்கம் சாயும் அதிமுக முக்கிய புள்ளிகள்
சென்னை: ஜெயலலிதா ஆக்டிவாக இனி செயல்படமுடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க.அரசு, தமிழக தலைமை செயலாளர் மூலமாக சசிகலா தரப்பை தங்கள் வழிக்கு கொண்டுவந்து தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை ஏற்படுத்திக்கொண்டது.
இதே அணுகுமுறையை அதிமுக எம்.பி.க்கள் பல பேர் பா.ஜ.க.வோடு நெருக்கமாக விரும்பி அதற்கான ரகசிய சந்திப்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

அதாவது, ஜெயலலிதாவின் தற்போதைய உடல்நிலையின் உண்மைத்தன்மையை அறிந்து வைத்திருக்கும் எம்.பி.க்கள், சசிகலாவின் உத்தரவுகளுக்கு முழுமையாக ஆட்படவேண்டுமென்பதை ஏற்கும் மனநிலையில் இல்லை. அதனால், பா.ஜ.க.வில் காரியம் சாதிக்க அல்லது எதிர்காலத்தில் தங்களின் அரசியல் வாழ்வை அர்த்தமாக்கிக்கொள்ள பா.ஜ.க.தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசுகின்றனர்.
அந்த வரிசையில், கடந்தவாரம், அதிமுக ராஜ்யசபா எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப் மற்றும் தஞ்சை லோக்சபா எம்.பி.பரசுராமன் இருவரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமீத்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications