முதன்முறையாக தேர்தலில் களமிறங்கும் காஞ்சி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக தையூரைச் சேர்ந்த மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் காஞ்சிபுரம், உத்தரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த செங்கல்பட்டு லோக்சபா தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து காஞ்சிபுரம் (தனி) லோக்சபா தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளராக தையூரைச் சேர்ந்த 30 வயது மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பி.காம்., பட்டதாரியான மரகதம் குமரவேல், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர். தற்போது திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை திருப்போரூர் ஒன்றிய இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
மரகதம் முதல்முறையாக தற்போது லோக்சபா எம்.பி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications