நடுக்கடலில் கார்டன்.. கண்ணாடி பாலம்.. 134 அடி உயரம்.. மெரினாவில் "கருணாநிதி பேனா" எப்படி இருக்கும்?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை மெரினாவில் சிலையாக அமைக்க உள்ளனர். இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்த நிலையில் கடலில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கி உள்ளது. ஏதாவது வழக்குகள் இதற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருந்தால், அதற்கு ஏற்ப கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி வழக்குகளின் முடிவுகளுக்கு உட்பட்டது. கட்டுமானத்தின் போது 15 பேர்கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.

கட்டுமானம் எப்படி இருக்கும்?:இதற்கான கட்டுமானத்தை உலகத்தரத்தில் கட்ட இருக்கிறார்கள். இந்த பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும். திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கொண்டது.
இதைவிட 1 அடி உயரத்தில் பேனா சிலையை வைக்க உள்ளனர். இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள். அதாவது நடுவில் மட்டும் பேனா இருக்கும்.
அதை சுற்றி தளம் அமைக்கப்பட்டு அதில் கார்டன் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் மக்கள் பேனாவை தொட முடியாது. ஆனால் மெரினாவில் கடலில் இப்படி ஒரு அழகிய அமைப்பை ஏற்படுத்துவது சுற்றுலா துறையை மேம்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.

நேராக சமாதியில் இருந்தே செல்லும் வகையில் இங்கு நீண்ட பாலம் கட்டப்பட உள்ளது. கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று மக்கள் சிலையை ரசிக்கும்படி இந்த கட்டுமானம் செய்யப்பட உள்ளது.
கடலில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படும். 7 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த பாலம் இருக்கும். மொத்தமாக இதற்கு 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.

இந்த பகுதி சின்ன தீவு போல அமைக்கப்பட்டு, அங்கு மக்களுக்கு பல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் சமாதியில் இருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் வசனங்கள், கதைகள், கவிதைகள், அவரின் எழுத்துக்களை புகழும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள்.
அதாவது நடுவில் மட்டும் பேனா இருக்கும். அதை சுற்றி தொங்கும் தோட்ட அமைப்பு இருக்கும். இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
எங்கே வருகிறது:மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் இந்த நினைவுச்சின்னம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்திற்கு அருகில் பேனா நினைவுச்சின்னம் அமையவுள்ளது.
இங்கே அதிக மணல் உள்ளதாலும், தரை வலுவாக இருப்பதாலும், எளிதாக கட்டுமானம் மேற்கொள்ள முடியும். கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications