சசிகலாவுடைய முதல் அரசியல் உரையை எழுதி கொடுத்தவர் இவர்தானாமே!
சசிகலாவின் முதல் உரையை நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்தான் தயாரித்து கொடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: சசிகலாவின் முதல் உரையை நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்தான் தயாரித்து கொடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுவரை அவரது குரலைக் கேட்காத மக்கள், சசிகலாவின் குரல் எப்படி இருக்கும் என கேட்க ஆர்வமாக இருந்தனர்.
டிசம்பர் 31ஆம் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா பயன்படுத்தும் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்றார் சசிகலா. அன்றுதான் அவர் முதல் முறையாக வெளியுலகில் மைக் முன்பு பேசினார்.
அவரது முதல் உரை குறிப்பு மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தது. உருக்கமாக, சசிகலா மீது அனுதாபம் வரும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது அந்த உரை.

உரையை தயாரித்தது யார்?
இதையடுத்து இந்த உரையை யார் தயாரித்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. குழு அமைத்து அந்த உரை தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

முதல் உரையை தயாரித்தவர்
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சசிகலாவின் முதல் உரையை தயாரித்து கொடுத்தது தான்தான் என்றார்.

ஜெ.வை பார்க்க விடாமல்
மேலும் தினகரன் பெயரில் வந்த 41 அறிக்கைகளை எழுதிக்கொடுத்ததும் தான்தான் என்று கூறினார். மேலும் ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டதை விட ஜெயலலிதாவை யாரும் பார்க்கவிடாமல் சசிகலா பார்த்துக்கொண்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிகமாக வசூல் செய்த சசி
நல்ல மருத்துவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க விடாமல் உடன் இருந்தவர்கள் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும் 30 வருடங்களுக்கு மேல் ஜெயலலிதாவை பார்த்துக்கொண்ட சசிகலா, அதற்காக வசூல் செய்தது அதிகம் என்றும் மருது அழகுராஜ் தெரிவித்தார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications