தடையில்லா சான்றுக்கு இழுத்தடிக்கும் அதிகாரிகள்- மூடப்படும் அபாயத்தில் தீப்பெட்டி ஆலைகள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தீப்பெட்டி மூலப்பொருளுக்க தடையில்லா சான்று வழங்க அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால் ஆலைகள் இயங்காமல் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி நிறுவன அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி, விருதுநகர், வேலூர் மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டி தொழில் நடந்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இங்கு தயாரிக்கும் தீப்பெட்டிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இது போல் கென்யா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஏமன், வடகொரியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இஙகிருந்து தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு ஏராளமான அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
இதில் முக்கால் வாசி பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் தீப்பெட்டி தயாரிப்புக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரேட், சல்பர் போன்ற வேதிப்பொருட்களை வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.
கடந்த காலங்களில் தடையில்லா சான்று விண்ணப்பித்த ஓரிரு வாரங்களில் கிடைத்தது. ஆனால் கடந்த ஐந்து வாரங்களாக தடையில்லா சான்று அளவு கூட்டுதல், புதுப்பித்தல் போன்ற பணிகள் சரிவர நடைபெறாததால் தீப்பெட்டி தொழிலுக்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.
இதுகுறித்து ஆலை தொழில் அதிபர்கள் கூறுகையில், ஏற்கனவே தீக்குச்சி இறக்குமதி செய்யும்போது பூச்சிமருந்து சான்றிதழ் பெருவதால் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது தீப்பெட்டி மூலப்பொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அரசு தலையிட்டு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications