மிரட்டலுக்கு குடிமகன் அஞ்சலாம்; தமிழகத்தின் முதல் மகன் அஞ்சலாமா?.. டி.ஆர் கேள்வி
சசிகலா தரப்பினரின் மிரட்டலுக்கு சாதாரண குடிமகன் அஞ்சலாம், ஆனால் தமிழகத்தின் முதல் மகனான முதல்வர் அஞ்சலாமா? என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சசிகலா தரப்பினரின் மிரட்டலுக்கு பயந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக கூறும் ஓ.பன்னீர் செல்வம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள போதிலும் அஞ்சுவது சரியா? என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை முன்மொழிந்த ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் அனுப்பினார்.

பின்னர் திடீரென ஜெயலலிதாவின் சமாதியில் மௌன புரட்சி நடத்திய ஓ.பன்னீர் செல்வம், தன்னை சசிசலா தரப்பினரும், மூத்த நிர்வாகிகளும் நிர்பந்தப்படுத்தி , கட்டாயப்படுத்தியதாலேயே தாம் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்த வரை இருந்த 175 நாள்களில் ஜெயலலிதா குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்?
ரவுடி கும்பலின் மிரட்டலுக்கு சாதாரண குடிமகன் அஞ்சலாம், ஆனால் மாநிலத்தின் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் பயந்தார் என்று கூறுவது சரியல்ல. அஞ்சினார் என்றால் ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்க ஆசைப்படலாமா?
இத்தனை நாள்கள் ஓபிஎஸ் அணி என்ன செய்து கொண்டிருந்தது பூனைக்கு மணி கட்டுவது யார்? ஓபிஎஸ்ஸின் திடீர் தியானம் ஏன்? என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications