Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொல்ல முடியாத அளவுக்கு அட்டூழியம்.. இலங்கை புதிய அதிபர் அநுரவுக்கு மயிலாடுதுறை எம்.பி கடிதம்!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேர் உள்பட அனைத்து இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா, இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயகவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 ஃபைபர் படகுகளில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

fishermen sri lanka anura kumara dissanayake

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு ஃபைபர் படகுகளில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் ஆகிய 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது உறுதியானது.

எஞ்சிய இரண்டு படகுகளில் 6 மீனவர்கள் தப்பி, பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு கண்ணீர்மல்க மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபராகப் பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயகவுக்கு மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா எழுதியுள்ள கடிதத்தில், "மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரர்களின் உடல்களை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள்.

இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது.

எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+