நெல்லை மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் கவுன்சில் குழு திடீர் ஆய்வு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் டெல்லியை சேர்ந்த இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 150 இடங்கள் உள்ளன. இநத கல்வியாண்டில் இதை 250 ஆக உயர்த்த மருத்துவ கல்லூரி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான இடங்களை 250 ஆக உயர்தத மத்திய கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. இதனால் 150 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடந்தது. புதிய கல்வியாண்டுக்கான படிபபுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென நெல்லை அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு வந்தனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் இககுழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் நெல்லை மருத்துவ கல்லூரியின் அனைத்து பிரிவுகளுக்கும் போய் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவ பரிசோதனை கூடம், ஆகியவற்றை பாரவையிடடு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மாணவர்களுக்கு கற்று தர போதிய பேராசிரியர்கள், டாக்டர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வு முழுவதையும் அவர்கள் வீடியோவில் பதிவு செய்தனர். இந்த திடீர் ஆய்வால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications