நம்பவைத்து நெஞ்சில் குத்திவிட்டார் பிரதமர் மோடி... கறுப்புக்கொடி போராட்டத்தில் வைகோ குற்றச்சாட்டு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சின்னமலைப் பகுதியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தி பிரதமரின் வருகைக்கு மதிமுகவினர் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சென்னை சின்னமலை பகுதியில் மினி டெம்போவில் நின்றபடி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது வைகோ பேசியதாவது : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது நான் தான். இலங்கையில் கொத்துகொத்தாக தமிழர்களைக் கொன்ற அதிபர் ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைத்திருந்தார்.

தமிழகத்தில் இருந்து ஒரு தலைவர் கூட 3 நாட்கள் கண்டனக் குரல் எழுப்பவில்லை, முதன்முதலில் எதிர்ப்பை பதிவு செய்தது நான் தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தேன். 8 பக்கத்திற்கு ஒரு மெயிலை நான் மோடிக்கு அனுப்பினேன், அதில் நான் எங்களை நம்ப வைத்து முதுகில் அல்ல நெஞ்சில் குத்திவிட்டீர்கள் என்று சொன்னேன்.
காவிரிக்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடக்கிறது, இது இன்று நேற்று நடக்கும் போராட்டம் என்று நினைத்துவிட வேண்டாம். காவல்துறையினரை ஆட்சியாளர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர், உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறையை தமிழக டிஜிபி தவறாக பயன்படுத்துகிறார். இது தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதை எங்களை போராட அனுமதியுங்கள் என்றும் வைகோ போராட்டத்தின் போது பேசினார்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது!












Click it and Unblock the Notifications