ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு- சென்னையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம்!
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் மதிமுகவினர் அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் செப்டம்பர் 25-ந் தேதியன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உரையாற்றுகிறார். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமை குழுவுக்கு அனுமதி மறுத்து வரும் ராஜபக்சேவை ஐ.நா.சபையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.

இதனால் ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் டெசோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராஜபக்சேவை ஐநாவில் பேச அனுமதி அளிப்பதன் மூலம் அதன் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் குழு தனது விசாரணையை நடத்த வேண்டிய இடம் தமிழகம் என்றார்.












Click it and Unblock the Notifications