மதிமுக சார்பில் நாளை புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புனித ரமலான் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புனித ரமலான் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில், எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில், சிறுபான்மை பிரிவு மாநிச் செயலாளர் முராத் புஹாரி தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சித்தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாகிருல்லா சிறப்பு விருந்தினாராக பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications