கருத்து கணிப்புகள் மூலம் மக்களை குழப்ப அதிமுக, திமுக சதி: வைகோ குற்றச்சாட்டு
மதுரை: கருத்து கணிப்புகள் மூலம் மக்களை குழப்புவதற்கு அதிமுகவும் திமுகவும் சதி செய்வதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் அ.தி.மு.க- தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான். லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. மதுவால் இளைய சமுதாயம் சீரழிந்து விட்டது.
எனவே இந்த 2 கட்சிகளையும் வாக்காளர்களாகிய நீங்கள் விரட்டியடிக்க வேண்டும். ஊழலற்ற மது இல்லாத நல்ல தமிழகம் உருவாக மக்கள் நலக்கூட்டணி பாடுபடும். இந்த கூட்டணி தமிழகம் முழுவதும் அமோக வெற்றி பெறும்.
இதை பொறுக்க முடியாமல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பணத்தை வாரி இறைத்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்ப பார்க்கின்றன. மக்கள் நலக்கூட்டணி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications