கிரானைட் கொள்ளை: பிஆர். பழனிச்சாமியை விடுதலை செய்த நீதிபதி மகேந்திரபூபதி சஸ்பெண்ட்!
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பிஆர்பியை விடுதலை செய்த மேலூர் குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதிய மாஜிஸ்திரேட் ஆக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு நிலங்களில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை அடுக்கி வைத்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்களை வழக்கில் இருந்து விடுதலை செய்ததோடு, அரசின் சார்பில் வழக்கு தொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்சுரல் மிஸ்ரா ,அரசு சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர்கள் ஷீலா மற்றும் ஞான கிரி மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு சொன்னார் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மீது அடுக்கடுக்கான புகார்களை, கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் டெல்லி உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வரை அனுப்பி வந்தனர்.
புகார்கள் அனுப்பியதன் எதிரொலியாக நேற்று மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன் ஆகியோர் மேலூர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
வழக்கம் போல மகேந்திர பூபதி நேற்று காலை வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தார். நீதிபதியை தலைமை எழுத்தர் மூலம் டயாசில் இருந்து கீழே இறங்கி வரச்சொல்லிவிட்டு, நீதிமன்றத்தில் இருக்கும் கோப்புகளை இரண்டு நீதிபதிகளும் ஆய்வு செய்தனர். இதனால் நேற்று நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டாவது நாளாக இன்றும் மகேந்திர பூபதி மேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் கையாண்ட கோப்புக்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மகேந்திர பூபதியிடம் விசாரணை.
இந்த நிலையில் மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிரானைட் குவாரி வழக்குகளை விசாரித்த முறைக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பரிந்துரைத்தது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரையின் பேரில் 2 நீதிபதிகள் மகேந்திர பூபதியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் மகேந்திர பூபதியை இடைநீக்கம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சரவணன், பஷீர் அகமது ஆகியோர் நீதிபதி பூபதியிடம் இன்று சஸ்பென்ட் உத்தரவை அளித்தனர்.
மேலூர் குற்றவியல் நடுவர் மன்ற புதிய மாஜிஸ்திரேட் ஆக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக நீதித்துறை வட்டாரமே பரபரத்துக்கிடக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications