திருட்டு நகைகளை வாங்கி விற்க மாட்டோம் – வணிகர் சங்க பேரவை உத்தரவாதம்
சென்னை: தமிழ்நாட்டில் திருட்டு நகை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர்களாகிய நாங்கள் துணை நிற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, மாவட்டத் தலைவர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருகம்பாக்கத்தில் அடகு மற்றும் நகை வணிகம் செய்யும் வணிகர் ஹிராராம் என்பவர் அக்டோபர் 22 ஆம் தேதி அன்று அவர் கடையில் வைத்து கொலை செய்யப்பட்டார். நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
காவல்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுத்தும், வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வேண்டுகிறோம்.
திருட்டு நகை சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் திடீரென்று கடையில் நுழைந்து அடகு மற்றும் நகை வணிகர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
மேலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அப்பாவி வணிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. திருட்டு நகை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு பேரமைப்பும், வணிக சங்கங்களும் துணை நிற்காது.
ஆனால் அப்பாவி வணிகர்கள் காவல் துறையால் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்து அழைத்துப் பேசி தீர்வுகாண வேண்டுகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications