வானிலை இலாகாவின் பெரும் தோல்வி.. சந்திரனுக்கு ராக்கெட் விட முடியுது, புயலை கண்டுபிடிக்க முடிந்ததா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!- வீடியோ

    சென்னை: உரிய நேரத்தில் புயல் குறித்த முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையங்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை என்பதுதான் குமரி மாவட்ட மீனவர்களின் பெரும் பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது. அதுதான் இன்று அரசுக்கு எதிராக விஸ்வரூப பிரச்சினைகள் வடிவத்தில் எதிரொலிக்கிறது.

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி பிறகு புயலாக மாறியது.

    டிசம்பர் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் பலத்த சூறை காற்றுடன் இந்த புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், பலா, வாழை, ரப்பர் மரங்கள் விழுந்து நொறுங்கின. மழை கொட்டிக்கொண்டிருந்தது.

    புயல் ஆட்டம்

    புயல் ஆட்டம்

    2000த்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து, குமரி மற்றும் அண்டை மாவட்டமான நெல்லையின் கடலோர பகுதிகளிலும் மின்சார இணைப்பு இன்றி மக்கள் தவித்தனர். செல்போன் கோபுரங்கள் விழுந்ததால் மக்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடல் கொந்தளித்து கிராமங்களுக்குள் சில அடி தூரம் வந்தது. அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன.

    தனியார் வானிலை ஆய்வாளர்கள்

    தனியார் வானிலை ஆய்வாளர்கள்

    இப்படி பெயரிடப்படாத ஒரு பெரும் காற்று தென் மாவட்டத்தை புரட்டி போட்டுக்கொண்டிருந்தபோதும், அது புயல்தான் என்பதை அறிவிக்கவில்லை தமிழக வானிலை இலாகா. இந்திய வானிலை துறையும் அமைதி காத்தது. மறுபக்கம், தனியார் வானிலை ஆய்வாளர்களோ, ஐயோ, அது புயல்தாங்க என கதறியபடி இருந்தனர். கண்டுகொள்வார் இல்லை.

    இதுதான் எச்சரிக்கையா?

    இதுதான் எச்சரிக்கையா?

    சாவகாசமாக மதியம் வழக்கம்போல நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில், அது புயல்தான் என்று ஹஸ்கி வாய்சில் மெல்ல தகவல் வெளியிட்டது சென்னை வானிலை மையம். அந்த அறிவிப்பை (!) அறியக்கூட அப்போது குமரி மாவட்டத்தில் எந்த தொலைதொடர்பு சாதனமும் இயங்கவில்லை. ஏனெனில் புயல் அதற்குள்ளாக தனது வேலையை காட்டி முடித்திருந்தது. வானிலை இலாகா கணித்ததைவிட வேகமாக ஒகி புயலாக மாறி நகர தொடங்கியதே இதற்கு காரணம்.

    2 நாட்கள் முன்பே

    2 நாட்கள் முன்பே

    வழக்கமாக புயல் சின்னம் உருவானால் 2 நாட்கள் முன்பே கூறிவிடும் வானிலை ஆய்வு மையம், இம்முறை கோட்டை விட்டதன் கொடுமையைத்தான் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி நடுக்கடலுக்கு சென்ற மீனவர்களும் அனுபவித்தனர். பல நாட்கள் முன்பே கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எப்படி முன் அறிவிப்பு கொடுப்பது என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+