இன்று முதல் மெட்ரோ ரயிலில் 20 சதவீதம் கட்டணச் சலுகை- 3 வகை பயண அட்டைகளும் அறிமுகம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று வகையான பயண அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், பயணிகளுக்கு 20 சதவீத கட்டணச் சலுகையும் அளிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி போக்குவரத்து தொடங்கப்பட்டது.
குறுகிய பகுதிக்கு இடையே இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதிருப்தியில் பயணிகள்:
மேலும், ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம்:
தற்போதைய நிலையில் மெட்ரோ ரயிலில் தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதன் மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். எனவே, அன்றைய நாட்களில் 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

20 சதவீத கட்டண சலுகை:
இதுவரைக்கும் மெட்ரோ ரயில் இயக்கத்தின் மூலம் சுமார் ரூபாய் 4.5 கோடி அளவிலேயே வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 20 சதவீத கட்டண சலுகையை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அட்டை வாங்குபவர்களுக்கு மட்டும்:
அதாவது, டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு இந்த கட்டண சலுகை பொருந்தாது. மாறாக, பயண அட்டை வாங்குபவர்களுக்கே இந்த சலுகை பொருந்தும். இந்த பயண முறைக்கான அட்டை 3 வகையாக வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகை பெற முடியும்.

செல்லும் நாட்கள்:
12 முறை, 50 முறை, 100 முறை என்று தொடர் பயண முறைகளுக்கான கட்டணம் அட்டையில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், 12 பயண முறைகளுக்கான அட்டை 7 நாட்களுக்கும், 50 பயண முறைகளுக்கான அட்டை 30 நாட்களுக்கும், 100 பயண முறைகளுக்கான அட்டை 60 நாட்களுக்கும் செல்லும் திறன் கொண்டது.

கால அளவும் சேரும்:
இந்த பயண சலுகை அட்டையை பெற, திரும்ப பெறத்தக்க முன்பணம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். ஒரு பயண முறை என்பது, பயணிகள் பயணம் தொடங்கும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையுள்ள வழிப்பயணமாகும். இந்த பயண அட்டையில் மீண்டும் பணம் பதிவேற்றம் செய்யப்படும்போது, ஏற்கனவே மீதியிருக்கும் தொகையும், கால அளவும் சேர்த்துக்கொள்ளப்படும்.

திருப்பிக் கொடுத்தால் பெற முடியாது:
பயண அட்டையை திருப்பிக் கொடுத்தால், எஞ்சியுள்ள பயண முறைகளுக்கான தொகையையும், முன் பணத்தையும் பயணிகள் திரும்ப பெற முடியும்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications