இன்று முதல் மெட்ரோ ரயிலில் 20 சதவீதம் கட்டணச் சலுகை- 3 வகை பயண அட்டைகளும் அறிமுகம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று வகையான பயண அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், பயணிகளுக்கு 20 சதவீத கட்டணச் சலுகையும் அளிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி போக்குவரத்து தொடங்கப்பட்டது.
குறுகிய பகுதிக்கு இடையே இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதிருப்தியில் பயணிகள்:
மேலும், ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம்:
தற்போதைய நிலையில் மெட்ரோ ரயிலில் தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதன் மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். எனவே, அன்றைய நாட்களில் 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

20 சதவீத கட்டண சலுகை:
இதுவரைக்கும் மெட்ரோ ரயில் இயக்கத்தின் மூலம் சுமார் ரூபாய் 4.5 கோடி அளவிலேயே வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 20 சதவீத கட்டண சலுகையை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அட்டை வாங்குபவர்களுக்கு மட்டும்:
அதாவது, டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு இந்த கட்டண சலுகை பொருந்தாது. மாறாக, பயண அட்டை வாங்குபவர்களுக்கே இந்த சலுகை பொருந்தும். இந்த பயண முறைக்கான அட்டை 3 வகையாக வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகை பெற முடியும்.

செல்லும் நாட்கள்:
12 முறை, 50 முறை, 100 முறை என்று தொடர் பயண முறைகளுக்கான கட்டணம் அட்டையில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், 12 பயண முறைகளுக்கான அட்டை 7 நாட்களுக்கும், 50 பயண முறைகளுக்கான அட்டை 30 நாட்களுக்கும், 100 பயண முறைகளுக்கான அட்டை 60 நாட்களுக்கும் செல்லும் திறன் கொண்டது.

கால அளவும் சேரும்:
இந்த பயண சலுகை அட்டையை பெற, திரும்ப பெறத்தக்க முன்பணம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். ஒரு பயண முறை என்பது, பயணிகள் பயணம் தொடங்கும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையுள்ள வழிப்பயணமாகும். இந்த பயண அட்டையில் மீண்டும் பணம் பதிவேற்றம் செய்யப்படும்போது, ஏற்கனவே மீதியிருக்கும் தொகையும், கால அளவும் சேர்த்துக்கொள்ளப்படும்.

திருப்பிக் கொடுத்தால் பெற முடியாது:
பயண அட்டையை திருப்பிக் கொடுத்தால், எஞ்சியுள்ள பயண முறைகளுக்கான தொகையையும், முன் பணத்தையும் பயணிகள் திரும்ப பெற முடியும்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications