மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரும் பணியை முதல்வர் தொடங்கினார்- வீடியோ
சேலம்: மேட்டூர் அணையை முதல்முறையாக தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளுக்காக முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 1934-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்முறையாக இந்த அணையானது தூர்வாரப்படுகிறது. 170 அடி ஆழம் கொண்ட இந்த அணையை தூர்வாருவதன் மூலம் 10 சதவீதம் நீர் கூடுதலாக தேக்கி வைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளி செல்லலாம்.
இதே போல் மற்ற அணைகளும் தூர்வாரப்படும். இந்த பணியானது தொடர்ந்து நடைபெறும். வண்டல் மண்ணை விவசாயிகள் அல்லாதோர் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள் தூர்வாரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications