முழு கொள்ளவை நோக்கி மேட்டூர் அணை: நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக வரும் 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி தெரிவித்திருந்தது.
ஆனால் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையை திறக்க உத்தரவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து தற்போது 103 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம், நாளை முதலே தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அணை நீர்மட்டம்
ஆகஸ்ட் 15 ஆம் தேதி அணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.10 அடியாக இருந்தது.
68.91 டி.எம்.சி தண்ணீர்
அணைக்கு விநாடிக்கு 89,207 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கொள்ளளவு 68.91 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
120 அடியை எட்டும்
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்னும் சில தினங்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications