மீண்டும் செஞ்சுரி போட்டது மேட்டூர் அணை.. 100 அடியை தொட்டது.. காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு!
காவிரியில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணை இன்று அதிகாலை 100 அடியை எட்டியது.
Recommended Video
பெங்களூர்: காவிரியில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணை இன்று அதிகாலை 100 அடியை எட்டியது.
கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
எப்படி
கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து காவிரியில் அதிக அளவு நீர் திறந்து விடப்பட்ட வண்ணம் இருக்கிறது.
என்ன நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 2 10,000 கன அடியாக அதிகரித்தது. அதன்பின் நேற்று இரவு வினாடிக்கு 2,35,000 கன அடியிலிருந்து 2,40,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
என்ன மட்டம்
இதனால் இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 64.87 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று திறப்பு
கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், காவிரியில் இன்னும் அதிக அளவில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று திறக்கப்படுகிறது.