For Daily Alerts
Just In
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்தது... விவசாயிகள் கவலை
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.12 அடியாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கன மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியதால் அங்குள்ள தண்ணீர் மேட்டூரை அடைந்தது.
இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்துவிட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 6, 961 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த அளவு தற்போது 6, 762 கன அடியாக குறைந்துள்ளது.
இதற்கிடையே அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Comments
English summary
Water level of Mettur Dam decreases gradually. Its water level gets decreased to 57.12 feet. Farmers are worried on seeing this.
Story first published: Tuesday, August 29, 2017, 9:09 [IST]