கர்நாடகத்தில் கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.58 அடியை எட்டியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மேட்டூர் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது, ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.58 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு 11 ஆயிரத்து 885 கன அடியில் இருந்து 33 ஆயிரத்து 3569 கனஅடியாக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.58 அடி உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 87.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 41.39 டிஎம்சியை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிக அளவில் இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications