ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான்.. தீபா அதிரடி!

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்று கூறியுள்ள தீபா, எம்ஜிஆர் - அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று தனது புதிய அமைப்பை அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் - அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கியுள்ள அவர் அதற்ன கொடியை அறிமுகம் செய்தார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.

MGR - Amma Deepa Peravai - Deepa launch new party

சென்னை தி. நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன் என்று கூறினார். எனது அரசியல் பயணம் இன்று முதல் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வேன் என்று கூறிய தீபா, தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழக மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன் என்று கூறிய தீபா, நிலையான ஆட்சியையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்குவோம் என்றும் கூறினார்.

துரோகத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று கூறியா தீபா, அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களுடன் போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+