எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: சென்னையில் இன்று மாலை நடக்கிறது.. முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு!
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடக்க உள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடக்க உள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளையும் பற்றியும் அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழக்க பல மாவட்டங்களில் இந்த விழா கொண்டாப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மதுரையில் தொடங்கிய இந்த விழாவானது திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, தேனி என்று வரிசையாக எல்லா மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த விழாவில் நிறைவு விழா நடக்கிறது.

தலைமை
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த விழா நடைபெறும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் முன்னிலை வகிப்பார். விழாவின் ஒரு நிகழ்வாக இவர் எம்ஜிஆர் பொன் மொழி தொகுப்பை வெளியிட இருக்கிறார்.

கலந்து கொள்ளப்போவது
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் டி. ஜெயக்குமார் உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள். எம்ஜிஆரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய தலைவர்கள்
டிடிவி தினகரன், ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார். யார் யார் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எங்கு எப்போது
இன்று மாலை சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு இந்த விழா தொடங்கும் . இந்த விழாவுடன் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழாவும் நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications