வழக்கம் போல் நாளை பால் விநியோகம் செய்யப்படும்.. வதந்திகளை நம்ப வேண்டாம்!
சென்னை: வழக்கம் போல் நாளை பால் விநியோகம் செய்யப்படும் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை காரணமாக கொண்டு நாளை பால் கிடைக்காது என தவறான தகவல்களை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

கடும் மழை வெள்ளத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும், சுனாமி தாக்கிய போதும், கடுமையான மழை, வெள்ளம், பனி என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் ஏற்பட்டாலும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கொண்டு போய் சேர்க்கும் பணியினை பால் முகவர்கள் சிறப்பான முறையில் செய்து வந்திருக்கிறோம். தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறோம்.
தமிழக முதல்வர் அவர்கள் பரிபூரணமாக குணமடைய வேண்டும் என நினைக்கும் கோடிக்கணக்கான இதயங்களில் ஒருவர்களாக இருக்கும் பால் முகவர்கள் இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கிட தயாராக இருக்கிறார்கள். அது போலவே ஆவின் மற்றும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் மக்கள் நலப்பணியாற்றிட தயாராக இருக்கிறார்கள்.
பொதுமக்கள் எவரும் தேவையற்ற பதற்றத்தை உருவாக்காமல் வழக்கம் போல் இருக்குமாறும், பால் முகவர்களின் கடைகளுக்கும், விநியோகம் செய்யும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு கொள்கிறோம்.
மேலும் பால் கிடைக்காது என தவறான தகவல்களை பரப்புவதால் ஒரு சில விஷமிகள், சுயநலம் கொண்ட சில்லறை வணிகர்கள் பாலினை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும், எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பாலினை அதிக அளவில் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே நாளை பால் கிடைக்காது எனும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications