எழுத்தாளர் ஞாநி உடல் தானம் - குடும்பத்தினருக்கு நன்றி சொன்ன விஜயபாஸ்கர்
மறைந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார்.
சென்னை: மறைந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஞாநி குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் தானம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

எழுத்தாளர் ஞாநி சங்கரன், உடல் நலக்குறைவால் கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் காலமானார். 63 வயதான ஞாநி, சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
தன் உடலை மருத்துவமனைக்குத் தானமாக வழங்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அவரின் விருப்பப்படியே உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாநி குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஞாநி, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications