முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தர்ப்பவாதி.. அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு சந்தர்ப்பவாதி என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் ஒரு சந்தர்ப்பவாதி என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இன்று உலக மகளிர் தினம். அதனை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். அவருடன் நிலோபர் கஃபில், சரோஜா, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சென்று அவ்வையாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓபிஎஸ் நடத்தும் உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் ஒரு சந்தர்ப்பவாதி என்று கூறினார்.
மேலும் மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், மீனவர்கள் பக்கம் எப்போதும் தமிழக அரசு உடன் இருக்கும் என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications