அமமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை... சிதறிவிடும் - அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் நெல்லிக்காய் மூட்டை போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நாஞ்சில் சம்பத் போல டிடிவி தினகரனிடம் இருந்து அனைவரும் விலகி செல்வார்கள் எனவும் அவர் விரைவில் தனிமரமாவார் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமமுக நெல்லிக்காய் மூட்டை போன்றது மூட்டை அவிழ்க்கப்பட்டால் சிதறிவிடுவார்கள். அப்போது தினகரன் தனியாகத்தான் நிற்க வேண்டியிருக்கும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் கே சி பழனிச்சாமி நீக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், கட்சியின் கொள்கை முடிவுகளை தனி நபர் எடுக்க முடியாது என்றார்.
நீக்கப்பட்டது ஏன்?
கட்சி கொள்கையின் விதிமுறைகளை மீறி பேசியதால் கே.சி. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆட்சி வேறு, கொள்கை விவரங்கள் வேறு என்பதை அறியாததால் அதிமுகவில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்பட்டார் என்று கூறினார்.
முடிச்சி போட வேண்டாம்
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் காவிரி விவகாரத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முடிச்சுப்போடக்கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வெளியேறுவார்கள்
டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்றது. மூட்டையை அவிழ்த்தால் அனைத்தும் சிதறிவிடும். அதுபோலத்தான் இப்போது நாஞ்சில் சம்பத் இப்போது வெளியேறியுள்ளார்.
தனிமரமாவார் தினகரன்
இப்போது டிடிவி தினகரனிடம் நிறைய பேர் இருப்பதாகத்தான் தோன்றும். நெல்லிக்காட்டை மூட்டை போல அனைவரும் சிதறி வெளியேறிய பின்னர் தனிமரமாகிவிடுவார் தினகரன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.