மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை தெரியும்.. இலையை மீட்ட இரட்டை குழல் துப்பாக்கி யார் தெரியுமா!
முதல்வர், துணை முதல்வரை அமைச்சர் ஜெயக்குமார் புகழ்ந்து பேசினார்.
சென்னை: இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கிதான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். விழா மலரை துணை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் விழாவில் பேசியதாவது:
இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கிதான் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும். அதிமுகவின் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம்.
சிலர் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.