"மணி 9.10 ஆச்சு! டாக்டர் வரலையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீர் ஆய்வு.. விழிபிதுங்கிய மருத்துவமனை
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியன், அங்கு பணிக்கு வராத ஒரு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா சுப்பிரமணியன். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் திண்டுக்கல், வத்தலகுண்டு நோக்கி பயணித்தார்.
அப்போது வாடிப்பட்டி அருகே திடீரென காரை நிறுத்த சொன்னார். வாடிப்பட்டிக்கு செல்லும் வழியில் 4 வழிச்சாலை அகில்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காரை செலுத்த சொன்னார். உடனே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அமைச்சர் மாசுவை வரவேற்றனர்.

மருத்துவமனை ஆய்வு
இதையடுத்து மருத்துவமனையை பார்வையிட்டார். நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் வருகை பதிவேட்டை கேட்டார். அப்போது அங்கு பணிக்கு வரவேண்டிய மருத்துவர் பூபேஷ் குமார் எந்த தகவலையும் கொடுக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மணி ஆகிடுச்சி
"மணி 9.10 ஆகிவிட்டது, இன்னும் ஏன் டாக்டர் வரவில்லை. இன்று மட்டும்தான் லேட்டாக வருகிறாரா, இல்லை தினந்தோறும் இப்படிதான் லேட்டாக வருகிறாரா" என கேட்டார் அமைச்சர். உடனே அந்த இடத்திலேயே மருத்துவ அதிகாரிகளுக்கு போன் போட்டார் அமைச்சர் சுப்பிரமணியன்.

2 மணி நேரம் லேட்
அப்போது அவர் "டாக்டர் பூபேஷ்குமார் நேற்று லீவு எடுத்துள்ளார். இன்னிக்கு 2 மணி நேரமாக லேட்டாக வருவதாக வாய்மொழியாக கூறியுள்ளாராம். நேற்று லீவு எடுத்தவருக்கு இன்று லேட்டாக வர லெட்டர் கொடுக்க வேண்டியதுதானே. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் இங்கு இரு மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

இன்னொரு டாக்டர் வேண்டும்
ஒருவர் இன்னும் வரவில்லை, இன்னொருவர் பணிமாறுதலால் சென்றுவிட்டார், எனவே ஒரு டாக்டரை இங்கு மாற்றமுடியுமா என பாருங்கள் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார். கொரோனா தடுப்பூசி கேம்ப் எத்தனை நடக்கிறது என்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகள் குறித்தும் அதன் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். அமைச்சரின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications