அதெல்லாம் விடுங்க..சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது தெரியுமா..அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன முக்கிய தகவல்
மதுரை: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்த அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 1961ம் ஆண்டுக்கு பிறகு இங்கு சாதி வாரி கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. இவ்வாறு கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் குறிப்பிட்ட சமூக மக்கள் இந்தியாவில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கின்றனர் என்பது தெளிவாகிவிடும். இதன் மூலம் இடஒதுக்கீட்டை மறு நிர்ணயம் செய்ய முடியும்.

உதாரணமாக பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் இட ஒதுக்கிடும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விகிதம் தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மாற்றப்படலாம். ஏனெனில் மேற்குறிப்பிட்ட இரண்டு சமூக மக்களின் எண்ணிக்கையும் கூடுதலாகியிருக்கும். இப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் எண்ணிக்கை தெரிந்துவிட்டால் அதற்கேற்ப இடஒதுக்கீடு சதவிகிதத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட சமூக மக்கள் அல்லது அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்கும்.
எனவேதான் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக பார்க்கப்படுகிறது. அதேபோல பாஜகவை மற்றும் வலதுசாதி மதவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை பொறுத்த அளவில் இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் இந்த கணக்கெடுப்பை மத்திய அரசு கிடப்பில் போட்டு வருகிறது.
ஆனால் காங்கிரஸ் காலத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்தியது. இருப்பினும் அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த வரை இந்த கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிடவில்லை. இதனையடுத்து பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சில குளறுபடிகள் இருப்பதால் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட முடியாது என பாஜக மறுத்துவிட்டது. சரி இதெல்லாம் மத்திய அரசின் கதை. ஆனால் மாநிலத்தில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முதல் காரணம் மக்கள் தொகை விவரங்களை சேகரிப்பது, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவை மத்திய அரசின் அதிகாரத்திற்குள் வரும் என்பதால் மாநில அரசு இது தோடர்பாக நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பீகாரில் தற்போது இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் ஓய்வுப்பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக அமைத்தது.

இக்குழுவுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் தொடங்கிவிட்டதால் இந்த பணிகளை இக்குழுவால் முழுமையாக முடிக்க முடியவில்லை. ஆனாலும் இதற்கிடையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அது குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை இக்குழு மாநில அரசிடம் தாக்கல் செய்தது. மேலும், கூடுதல் கால அவகாசத்தை கேட்டியிருந்தது. ஆனால் அவகாசம் வழங்கப்படாததால் குழு இயங்காமல் இருந்தது.
இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கின. இதுகுறித்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், "சாதிவாரி கணக்கெடுப்புக்காக புதியதாக பாரதிதாசன் எனும் ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமனமாகி 3 மாதங்கள்தான் ஆகிறது எனவே கூடுதல் கால அவகாசத்தை கேட்டிருக்கிறார். இப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications