லஞ்சப் புகார் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓட்டம்பிடித்த அமைச்சர் சரோஜா!
லஞ்சப் புகார் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைச்சர் சரோஜா ஓட்டம்பிடித்துள்ளார்.
சென்னை: சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் இன்று செய்தியாளர்கள் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் சொல்லாமல் தலையை குனிந்தபடியே அவர் ஓட்டம் பிடித்தார்.
அமைச்சர் சரோஜா மீது தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி லஞ்சப் புகார் கூறினார். 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் பணியில் நீடிக்க முடியும் என மிரட்டியதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடமும் அமைச்சர் சரோஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கேட்டு மிரட்டிய அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் மாநாடு
இந்நிலையில் சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.466 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சரோஜா
தமிழகத்தில் மொத்தம் 11,89,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான தங்கு தடையின்றி நடந்து வருவதற்கு எந்த வகையில் பாதிப்பு அடைந்திருக்கிறார்களோ, அந்த வகையில் எந்த உதவி தேவையோ அதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்தார்போல் அனைத்து உபகரணங்களையும் நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

கேள்வியே கேட்க விடவில்லை
செய்தியாளர்களை கேள்வியே கேட்கவிடாமல் தொடர்ந்து அவர் பேசினார். தனது பேட்டியை முடித்த அவர் அவசர அவசரமாக கிளம்பினார்.

பதில் சொல்லாமல் ஓட்டம்
அப்போது செய்தியாளர்கள் ராஜ மீனாட்சியின் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் சொல்ல மறுத்த சரோஜா தலைகுனிந்தபடியே ஓட்டம் பிடித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications