For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னாது.. அமைச்சர் செல்லூர் ராஜூவைக் காணாமா.. கமிஷனரிடம் புகார்!

அமைச்சர் செல்லூர் ராஜை காணவில்லை என சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜை காணவில்லை சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஓபிஎஸ்க்கு பயந்து மன்னார்குடி கும்பல் அமைச்சர்களையும் அதிமுக எம்எல்ஏக்களையும் நேற்று முன்நாள் இரவு முதல் சிறைவைத்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

Minister Sellur Raj is missing: complaint to comissioner

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டசபை உறுப்பினருமான செல்லூர் ராஜுவைக் காணவில்லை என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அதில் செல்லூர் ராஜு தனது சட்டசபை அலுவலகம் அவரது வீடு மற்றும் தொகுதி என எங்கேயும் இல்லை என தெரிவித்தள்ளார்.

மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை உடனே கண்டுபிடித்துத் தரவேண்டும் என செந்தில்குமார் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குன்னம் தொகுதி எம்எல்ஏ, எம்எல்ஏ கீதா உள்ளிட்டோரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரை காணவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களை சிறைவைத்துள்ள மன்னார்குடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளது.

English summary
A Person Senthil kumar complaint to comissioner. In that petition he mentioned Minister Sellur raj is missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X