நீட் தேர்வு கேள்வி...பதில் சொல்லாமல் எழுந்து போன கே.ஏ செங்கோட்டையன்
நீட் தொடர்பான கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆனார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இன்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. அப்போது ஆய்வில் ஈடுபட்ட அமைச்சரிடம் செய்தியாளர்கள் நீட் தொடர்பான கேள்விக் கே
சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
இத்தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரம் மாணவ - மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியுள்ள இந்தத் தேர்வு இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 6, 737 பள்ளிகள் மூலம் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் எழுதுகின்றனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார்.

ஊக்கத் தொகை
அப்போது செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசும் போது, தமிழகத்தில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர் என்று கூறினார்.

10 மொழிகளில் தேர்வு
பிறமொழி மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வு எழுதலாம் என்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிறமொழி மாணவர்கள் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு எழுதலாம். அதன்வகையில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் உட்பட 10 மொழிகளில் தேர்வு எழுதுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கூடுதல் மாணவர்கள்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 65 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர் என்று செங்கோட்டையன் கூறினார். தொடர்ந்து பல்வேறு கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையனிடம் நீட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

எஸ்கேப்
அதற்கு அனைத்து மாணவர்களும் நீட் தேர்வு எழுத தயாரான நிலையில் இருப்பதாகக் கூறிவிட்டு, டக்கென்று கிளம்பி விட்டார். கேள்விக்கான பதிலை முறையாக சொல்லவில்லை. அவருடன் இருந்த செயலாளர் சபிதாவும் சிரித்துக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் இருந்து எழுந்து சென்றுவிட்டார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications