Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களால முடிஞ்சா பண்ணுங்க, இல்லனா கிளம்புங்க.. காண்ட்ராக்டரை எச்சரித்த அமைச்சர் டிஆர்பி ராஜா

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூரில் ரூ.78 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் 10 மாதங்கள் ஆகியும் ஆரம்ப நிலையிலேயே இருந்ததால் கோபம் அடைந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உங்களால முடிஞ்சா பண்ணுங்க, இல்லனா கிளம்புங்க.. அமைச்சருக்கு மட்டும் தெரிஞ்சதுனா அவ்வளவுதான்.. கிழிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பாரு"... என ஒப்பந்த நிறுவனத்தை எச்சரித்தார்.

திருவாரூர் நகராட்சிக்கு திருவாரூர் மடப்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீண்ட காலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிரர கொள்ளிடம் -வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சந்தைபேட்டை பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

Minister TRB Rajaa warns contractor over drinking water project works in Thiruvarur

இது தவிர தென்றல் நகர் மற்றும் கிடாரங்கொண்டான் என 4 இடங்களில் இருந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது. இந்த நான்கு மேல்நிலை தொட்டிகள் மூலம் நகர் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் குடிநீர் பற்றாகுறை அதிகமாகவே உள்ளது.

இதனிடையே குடிநீர் குழாய்களும் திருவாரூர் நகரில் புதிதாக பல இடங்களுக்கு அமைக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அம்ரூட் 2.0 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, திருவாரூரில் ரூ 78 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த குடிநீர் குழாய் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை அன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூரில் ரூ.78கோடியில் குடிநீர் திட்டப்பணிகளை 18 மாத காலக்கெடுவில் 10 மாதம் முடிந்துவிட்ட நிலையில், நகர் முழுவதும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டிய 15 ஆயிரத்து 965 வீடுகளில் இதுவரையில் வெறும் 404 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பணியினை முடிப்பதற்கு 8 மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் 3 சதவிகித பணிகள் கூட முடிக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, இப்படி பணிகள் நடைபெற்றால் எப்போது பணிகளை முடிப்பது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஓப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் திட்ட மேலாளரை எச்சரித்தார்.

இந்த ஆய்வின் போது திருவாரூர் கலெக்டர் சாரு, பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஆர்.டி.ஒ சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+