உங்களால முடிஞ்சா பண்ணுங்க, இல்லனா கிளம்புங்க.. காண்ட்ராக்டரை எச்சரித்த அமைச்சர் டிஆர்பி ராஜா
திருவாரூர்: திருவாரூரில் ரூ.78 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் 10 மாதங்கள் ஆகியும் ஆரம்ப நிலையிலேயே இருந்ததால் கோபம் அடைந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உங்களால முடிஞ்சா பண்ணுங்க, இல்லனா கிளம்புங்க.. அமைச்சருக்கு மட்டும் தெரிஞ்சதுனா அவ்வளவுதான்.. கிழிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பாரு"... என ஒப்பந்த நிறுவனத்தை எச்சரித்தார்.
திருவாரூர் நகராட்சிக்கு திருவாரூர் மடப்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீண்ட காலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிரர கொள்ளிடம் -வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சந்தைபேட்டை பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

இது தவிர தென்றல் நகர் மற்றும் கிடாரங்கொண்டான் என 4 இடங்களில் இருந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது. இந்த நான்கு மேல்நிலை தொட்டிகள் மூலம் நகர் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் குடிநீர் பற்றாகுறை அதிகமாகவே உள்ளது.
இதனிடையே குடிநீர் குழாய்களும் திருவாரூர் நகரில் புதிதாக பல இடங்களுக்கு அமைக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அம்ரூட் 2.0 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, திருவாரூரில் ரூ 78 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த குடிநீர் குழாய் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை அன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூரில் ரூ.78கோடியில் குடிநீர் திட்டப்பணிகளை 18 மாத காலக்கெடுவில் 10 மாதம் முடிந்துவிட்ட நிலையில், நகர் முழுவதும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டிய 15 ஆயிரத்து 965 வீடுகளில் இதுவரையில் வெறும் 404 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பணியினை முடிப்பதற்கு 8 மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் 3 சதவிகித பணிகள் கூட முடிக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, இப்படி பணிகள் நடைபெற்றால் எப்போது பணிகளை முடிப்பது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஓப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் திட்ட மேலாளரை எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது திருவாரூர் கலெக்டர் சாரு, பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஆர்.டி.ஒ சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications