உலகத் தரத்தில் புது திட்டங்கள்! விளையாட்டுத் துறையில் அசத்தல் அறிவிப்புகள்! உதயநிதி வெளியிட்ட லிஸ்ட்
சென்னை: சென்னையில் உலகத் தரத்தில் துப்பாக்கி சுடுதலுக்கான சிறப்பு அகாடமி அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உதயநிதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு;
* புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும்.
*கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி அனைத்து ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கப்படும்.

*தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எலைட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
*விளையாட்டு விடுதிகள் ரூ.10 கோடி செலவில் மறு சீரமைத்து மேம்படுத்தப்படும்.
*சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நவீன எல்.இ.டி. விளக்கு வசதி அமைக்கப்படும்.
*கோவில்பட்டியில் ஹாக்கி முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
*பாரா விளையாட்டுக்களை ஊக்குவிக்க நாட்டிலேயே முதல் முறையாக 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
*மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் வீக் போட்டிகள் நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படும்.
*விளையாட்டு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்படும்.

*சென்னையில் 2023 ஸ்குவாஷ் உலக கோப்பை நடத்த ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
*ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் விடுதி மற்றும் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்படும்.
*புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நிபுணத்துவ பயிற்றுநர்களாக பயன்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டுக்களுக்கான அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த நிதியுதவி.
*பொதுமக்கள் மத்தியில் உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் மாரத்தான் ஓட்டம் நடைபெறும்.
*நம்ம ஊரு விளையாட்டுத் திடல் அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு விளையாட்டுக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும்.












Click it and Unblock the Notifications