எடப்பாடி கட்சி பதவியை பறிப்பதா? ஜெ.ஆன்மா தினகரனை மன்னிக்காது- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்த தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சாடியுள்ளார்.
திருச்சி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்த தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சாடியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து கட்சிப் பதவியிலிருந்து பலரையும் வரிசையாக நீக்கி வருகிறார் தினகரன். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை 19 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா கொடுத்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பறித்த தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றார்.