நெடுவாசல் மக்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் கொண்டுவருவதை எதிர்த்து போராடி வரும் நெடுவாசல் பகுதி மக்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 15ம் தேதி மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடத் தொடங்கியது முதல் நெடுவாசலில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திக்க செய்வது என முடிவு செய்யப்பட்டது. போராட்டக்கார குழு சார்பில் நாளை முதல்வரை சந்திக்க உள்ளனர்.
போராட்டம் தொடங்கி 10 நாட்களாகியுள்ள நிலையில் முதல் முறையாக அரசு தரப்பு சமரச முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications